Wednesday, February 07, 2007

திருமால் கோயிலில் திரு அல்லாஹ் பூஜை

சிவமயம்

எனது இந்தப்பதிவிலே அனானி ஐயா ஒருவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததை நன்கு அவதானிக்கவும்.
Anonymous said...
அப்படி போடு என் ராசா!
எனக்கும் சில சந்தேகம் வந்துடுச்சி.
  • ஒரே பிரம்மமான பரமேஸ்வரன் ஏசு, நபி
    என்று ஏன் அவதாரம் எடுத்திருக்கக்கூடாது?

  • இல்லை,அல்லாவின் அவதாரமாக
    பரமேஸ்வரன் ஏன் இருக்கக்கூடாது?

  • அய்யனாரு,அய்யப்பன்,முருகன்,புள்ளையாரு போன்ற அவதாரங்களைவணங்கும் நீங்கள், ஏசு,நபி,அல்லா போன்ற அவதாரங்களை வணங்குவீர்களா?
பின் குறிப்பு:கடவுளைப் பற்றித் தெரியாதவர்கள்தான் கடவுளுக்கு பெயர் வைப்பார்கள்.கடவுள்களில் பாகுபாடு பார்ப்பார்கள்.
என்று அவர் மூன்று கேள்விகள் முன் வைத்திருக்கிறார். அவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்துக்களான எமது கடமையல்லவா?
அவரின் முதலாவது கேள்வி

அனானி ஐயா அவர்களே தாங்கள் கூறுவதைத்தான் நானும் கூறுகிறேன். ஏசு, நபி, அல்லா ஆக அவதாரம் எடுத்திருப்பது ஒரே பிரம்மமான பரமேஸ்வரன் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தாங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் ஆனால் தங்களுடைய சகோதரர்கள் சிலர்தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இரண்டாவது கேள்விக்கு வருவோம்

ஐயா அனானியாரே இந்த அவதாரங்கலெல்லாம் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டதாக பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எழுந்த புராணங்கள், வேத நூல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தாங்கள் பின்பற்றும் திருக்குர்ராணோ ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் எழுந்தவை என்று வரலாற்றாசிரியர்களின் கருத்து. ஆக 1500 - 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த திருக்குர்ராண் போன்ற புனித நூல்களினால் குறிப்பிடப்படும் அல்லாவானவர் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எழுந்த வேத, புராண நூல்களில் குறிப்பிடப்படும் பரமேஸ்வரனாக அல்லது கடவுளர்களாக அவதரித்திருக்க வாய்ப்பில்லை.


அத்துடன் தாங்களும், தங்கள் சமூகமும் இறைவன் ஒருவன் அவன் அவதாரங்களெல்லாம் எடுப்பதில்லை என்று நம்புகிறீர்கள். அத்துடன் இந்த அவதார விடயங்களெல்லாம் இந்துமதத்திற்கு மட்டுமே உரியன.
ஆகவே அல்லாவானவர் பரமேஸ்வரனாக அவதாரமெடுத்திருக்க சாத்தியமில்லை. அத்துடன் உங்கள் மூன்றாவது வினாவில் நீங்களே அல்லாவை அவதார புருஷர் என்று கூறியிருக்கிறீர்கள்.

உங்கள் மூன்றாவது வினா
பல அவதாரங்களை வழிபடும் நாங்கள் ஏசு, நபி, அல்லா போன்ற அவதாரங்களை வழிபட்டால் என்ன என்று தாங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
நாங்கள் வழிபடுகிறோம் என்பதே உண்மை. ஆம் சர்ச்சுக்கு போகும் இந்துக் குடும்பங்களை தாங்கள் அறியமாட்டீர்களா? அதேபோல் பள்ளிவாசலுக்கும் செல்ல பல இந்துக்குடும்பகள் தயாராக இருக்கிறார்கள் உங்கள் சகோதரர்கள் அனுமதிப்பார்களானால். அவ்வாறே இந்துக்கோயிலில் அல்லாவுக்கும் பூஜை செய்கிறார்கள். கீழே அதற்காண ஆதாரம்.


படங்களை கிளிக்கினால் தெளிவாக தெரியும்.

படம் 1



படம் 2

படம் 3


நன்றி : குமுதம் பக்தி ஜனவரி, 15 2005

இதுவும் இந்து மதம் தான்.

No comments: