Wednesday, February 07, 2007

திருமால் கோயிலில் திரு அல்லாஹ் பூஜை

சிவமயம்

எனது இந்தப்பதிவிலே அனானி ஐயா ஒருவர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததை நன்கு அவதானிக்கவும்.
Anonymous said...
அப்படி போடு என் ராசா!
எனக்கும் சில சந்தேகம் வந்துடுச்சி.
  • ஒரே பிரம்மமான பரமேஸ்வரன் ஏசு, நபி
    என்று ஏன் அவதாரம் எடுத்திருக்கக்கூடாது?

  • இல்லை,அல்லாவின் அவதாரமாக
    பரமேஸ்வரன் ஏன் இருக்கக்கூடாது?

  • அய்யனாரு,அய்யப்பன்,முருகன்,புள்ளையாரு போன்ற அவதாரங்களைவணங்கும் நீங்கள், ஏசு,நபி,அல்லா போன்ற அவதாரங்களை வணங்குவீர்களா?
பின் குறிப்பு:கடவுளைப் பற்றித் தெரியாதவர்கள்தான் கடவுளுக்கு பெயர் வைப்பார்கள்.கடவுள்களில் பாகுபாடு பார்ப்பார்கள்.
என்று அவர் மூன்று கேள்விகள் முன் வைத்திருக்கிறார். அவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்துக்களான எமது கடமையல்லவா?
அவரின் முதலாவது கேள்வி

அனானி ஐயா அவர்களே தாங்கள் கூறுவதைத்தான் நானும் கூறுகிறேன். ஏசு, நபி, அல்லா ஆக அவதாரம் எடுத்திருப்பது ஒரே பிரம்மமான பரமேஸ்வரன் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தாங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் ஆனால் தங்களுடைய சகோதரர்கள் சிலர்தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இரண்டாவது கேள்விக்கு வருவோம்

ஐயா அனானியாரே இந்த அவதாரங்கலெல்லாம் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டதாக பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எழுந்த புராணங்கள், வேத நூல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தாங்கள் பின்பற்றும் திருக்குர்ராணோ ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் எழுந்தவை என்று வரலாற்றாசிரியர்களின் கருத்து. ஆக 1500 - 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த திருக்குர்ராண் போன்ற புனித நூல்களினால் குறிப்பிடப்படும் அல்லாவானவர் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எழுந்த வேத, புராண நூல்களில் குறிப்பிடப்படும் பரமேஸ்வரனாக அல்லது கடவுளர்களாக அவதரித்திருக்க வாய்ப்பில்லை.


அத்துடன் தாங்களும், தங்கள் சமூகமும் இறைவன் ஒருவன் அவன் அவதாரங்களெல்லாம் எடுப்பதில்லை என்று நம்புகிறீர்கள். அத்துடன் இந்த அவதார விடயங்களெல்லாம் இந்துமதத்திற்கு மட்டுமே உரியன.
ஆகவே அல்லாவானவர் பரமேஸ்வரனாக அவதாரமெடுத்திருக்க சாத்தியமில்லை. அத்துடன் உங்கள் மூன்றாவது வினாவில் நீங்களே அல்லாவை அவதார புருஷர் என்று கூறியிருக்கிறீர்கள்.

உங்கள் மூன்றாவது வினா
பல அவதாரங்களை வழிபடும் நாங்கள் ஏசு, நபி, அல்லா போன்ற அவதாரங்களை வழிபட்டால் என்ன என்று தாங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
நாங்கள் வழிபடுகிறோம் என்பதே உண்மை. ஆம் சர்ச்சுக்கு போகும் இந்துக் குடும்பங்களை தாங்கள் அறியமாட்டீர்களா? அதேபோல் பள்ளிவாசலுக்கும் செல்ல பல இந்துக்குடும்பகள் தயாராக இருக்கிறார்கள் உங்கள் சகோதரர்கள் அனுமதிப்பார்களானால். அவ்வாறே இந்துக்கோயிலில் அல்லாவுக்கும் பூஜை செய்கிறார்கள். கீழே அதற்காண ஆதாரம்.


படங்களை கிளிக்கினால் தெளிவாக தெரியும்.

படம் 1



படம் 2

படம் 3


நன்றி : குமுதம் பக்தி ஜனவரி, 15 2005

இதுவும் இந்து மதம் தான்.

Monday, February 05, 2007

இறைவனை கட்டுப்படுத்த முடியுமா ?

சிவமயம்

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவின் மூலம் என் இனிய இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்களின் மனதை புன்படுத்தும் நோக்கமோ அல்லது நகைக்கும் நோக்கமோ கிடையாது என்பதையும் மதிப்பிற்குறிய மரைக்காயர் ஐயார் அவர்கள் திரு எழில் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இடப்பட்டது என்பதையும் இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள் கன்னியமான சொற்பிரயோகங்களுடன் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவில் கன்னியமான சொற்களை பிரயோகிக்காத பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

டிஸ்க்கிளைமர்: இங்கே எனது வாதத்தின் மூலம் எதிர் தரப்பினர் மிகவும் கடுமையாக தாக்கப்படுவதை யாரேனும் உணர்ந்தால் தாக்கப்படுவது எதிர்க்கருத்து தெரிவித்த நபர் அல்ல அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தே என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் வணக்கம் நமது மரைக்காயர் ஐயா அவர்கள் கட்டுப்படுத்தப் படுவதா இறை? என்ற பதிவிலே பின்வருமாறு தெரிவித்துள்ளார். இந்தப்பதிவை படிக்குமுன் அனைவரும் சென்று ஒருமுறை அந்தப் பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

// "நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை"//

அதாவது இந்துக்களாகிய நாம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ சுவாமியறையில் இறைவன் திருவுருவத்தை வைத்து வழிபடுவதால் இறைவனை கட்டுப்படுத்துகிறோமாம்.

அத்தோடு நாம் இறைவனை கட்டுப்படுதுகிறோம் என்பதற்கு அவரும் வேறு சிலரும் பின்வரும் வாதங்களை முன்வைக்கிறார்கள்.

மரைக்காயர் ஐயார் இப்படி சொல்கிறார்

  • நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை

  • கோவிலில் இருக்கும் கடவுள்களில் சில கடவுள்கள் மிக சக்தி வாய்ந்தவை என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு ஊரில் இருக்கும் அதே கடவுள் சக்தி குறைந்தவர்தானே? இப்படி ஒரே கடவுளையே ஊருக்கு ஏத்த மாதிரி கோவிலுக்கு ஏத்த மாதிரி சக்தி கூட குறைச்சலா கட்டுப்படுத்தி வச்சிருக்கிறது யார்? முழுப்பிரபஞ்சத்திலும் நிறைந்திறுக்கும் கடவுள் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரி சக்தி உடையதாக இருக்க வேண்டாமா?

  • கோவில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது. காசு கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் கடவுள் தரிசனம் தருவார் என்பதும் கடவுளை கட்டுப்படுத்துவதுதான்.

அறிவுடை நம்பி ஐயா அவர்கள் பின்வறுமாறு தெரிவிக்கிறார்

  • இந்து (மட)க் கடவுளர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எதற்கு கருவறைக்குள் ஒழிந்து கொள்ள வேண்டும்?

  • ஆகமம், ஐதீகம் என்பதோடு ஐந்து ஆறு என்ற காலப்பூசைகள் எல்லாம் கட்டுப்பாடுகள் அல்லவா?

  • கட்டுப்பாடுகள் இல்லையென்றால் ஒருநாளாவது சுடலை மாடனை திருப்பதியிலும், முனியாண்டியை சபரிமலையிலும், ஐயனாரை காஞ்சி புரத்திலும் வைத்து பூசிக்க முடியுமா?

  • சூத்திரன் காலனிக்குள் பார்ப்பன சாமிகள் வந்தால் கடவுளும் தீட்டாகி விடுவான் என்றானே சுப்பிரமணி. இதெல்லாம் கடவுளைக் கட்டுப்படுத்துவதாகாதா?

ஸயீத் ஐயார் அவர்கள் பிவறுமாறு தெரிவிக்கிறார்

  • தனி மனிதர்கள் அறிவதெல்லாம் உண்மையாக முடியுமா?, அப்படியானால் கடவுள் மறுப்பாளர்களுக்கும் அவர்கள் அறிந்த உண்மைகள் உள்ளனவே அவர்களும் அவர்களறிந்த உண்மைகளின் படி கடவுள் இல்லை என்கின்றனரே அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை இந்துமதம்தான் ஏற்றுக் கொள்ளுமா?.

இவர்களுக்கு இவ்விடயங்களைப் பற்றி விளக்கவே இந்த பதிவு

ஐயா மரைக்காயர் அவர்களே முலுப்பிரபஞ்சத்திலும் பரந்து "காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கும்" பரம்பொருளை ஒரு இடத்திற்குள் அடக்கி விட முடியுமா அவன் எங்கும் இருக்கிறான், எல்லாவற்றிலும் இருக்கிறான் ஏன் என்றால் இவை எல்லாமே இறைவனது படைப்புக்கள் அவற்றில் அவனுக்கு வேறுபாடு கிடையாது. சிறிய புல்பூண்டுகள் முதல் பெரிய மரங்கள் வரை, உலகின் அனைத்து ஜீவ ராசிகளிலும் அவன் காணப்படுகிறான் அதனால் தான் இந்து மதத்தில் கல், மண், மரம், செடி, கொடி முதல் மாடுகள் வரையிலும் வணங்கப்படுகின்றன இந்த உண்மையை உணராதவர்களுக்கு இந்து மத வழிபாடுகள் ஆச்சரிமாய்த்தான் இருக்கும் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

அடுத்து கோயில்களில் உள்ள கடவுள்களின் சக்தி இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர் வேறுபடுவதென்பது இந்துக்களின் பொதுவான பேச்சு வழக்கு நம்பிக்கையே தவிர வேறொன்றும் கிடையாது, என்று இந்த பதிலை தெறிவித்ததற்கு இது எனது சொந்த கருத்து பெரும்பான்மை இந்துக்களின் கருத்து கிடையாது என்றார் மரைக்காயர் ஐயார்.

சரிதான் தனி ஒருவரின் கருத்து அனைவரது கருத்து ஆகாதுதான். ஆனால் கடவுளரின் சக்தி என்பது மாறாதது மாற்ற முடியாது. இந்துக்கள் இதை உணராமல் அறியாமையால் இவ்வாறு நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அனைவரும் கடைப்பிடிப்பதால் தவறான ஒன்று சரியானதாகி விடாது பொய்யானதும் உண்மையாகி விடாது மரைக்காயர் ஐயாரே. சரி தாங்கள் சொல்வது போலவே கோயில்களில் உள்ள கடவுள்களின் சக்தி இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர் வேறுபடுகிறதென்றே வைத்துக் கொண்டாலும் இறைவன் தானேவிரும்பி தான் அவ்வாறு வீற்றிருக்க முடியுமே தவிர வேறு யாரால்தான் கட்டுப்படுத்தி வைக்க முடியும்? சிந்தியுங்கள்.

ஐயாரே இறைவனிடம் நமக்கு தான் தேவையிருக்கிறதே தவிர இறைவனுக்கு எம்மிடம் எந்த தேவையும் இல்லை. இப்படியிருக்கும் போது இறைவனை கட்டாயம் வணங்கவேண்டும் என்றும் அவனை வணங்காதவிடத்து மறு உலகில் தண்டனை வழங்கப்படும் என்பது எதற்காக? அப்படி பயமுறுத்தி இறைவன்/அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி ஒருவர் இறைவனை வணங்க வேண்டும் என்று வற்புறுத்துவது/ நிர்ப்பந்திப்பது எதற்காக? மட்டுமல்லாது ஸயீத் ஐயா இப்படி சொல்கிறார்,

//"என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும்
சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்"எழில்.

தவறு அனைத்து சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒன்று. இறைத்தூதர் என்றால் எதோ இராஜங்கப்பதவி ஒன்றுமில்லை ஒரு மனிதருக்கு இறைவனைப்பற்றி அறிவிக்க கிடைக்கும் ஒரு பாக்கியம் அவ்வளவே. அவர்களிடத்திலும் அவர்களின் பொறுப்புப்
பற்றி விசாரிக்கப்படும்
.//

இறைவனைப் பற்றி சமுதாயத்திற்கு தெறிவிக்க வருபவர் ஏன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும்? , ஏன் அவர்களின் பொறுப்பு பற்றி விசாரிக்க வேண்டும்? இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு பெரிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் (Sales Ref.) தமது நிறுவனத்தின் விற்பனைப் பொருளை சந்தைப்படுத்த சென்று மக்களுக்கு அப்பொருள் பற்றி அச்சமூட்டி (அதாவது அப்பொருளை பயன் படுத்தினால் கேடு விளையும் என்று அறிவித்த பின்பும்) அதை பலவந்தப்படுத்தி எத்தனை பொருள்கள் விற்பனைசெய்தீர்கள் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் படி நிறுவன உரிமையாளர்/பொது முகாமையாளர் உத்தரவிடுவதைப் போன்றல்லவா இருக்கிறது? அதிலும் பொருட்களை/ கூடுதலான பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் விசாரனை கமிஷன், தண்டனை எல்லாம் வேறு.

இறைவனைப் பற்றி தெரியப்படுத்த எதற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும்?

//..இந்துமதத்தில் இறைவனை கட்டாயம் வழிபட வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்டது இதுதான் " உனக்கு இறைவனை வழிபட விருப்பம் இருந்தால் அவனை வழிபடு இல்லை என்றால் இறைவன் உன்னை'நீ என்னை வழிபடுஎன்று கெஞ்சப்போவதில்லை.'..நீஉனது கடமைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருந்தால் என்னை ஒரு கணம் நினைத்தாலே போதும் இதை விட வேறொன்றும் தேவையில்லை
என்கிறது இந்து மதம்."//
இந்து மதத்திற்காக இந்த சட்டங்களை இயற்றியது யார்?
என்று தாங்கள் கேட்டதற்கு நான் சொன்னது


//இது முற்றிலுமாக நான் உணர்ந்த உண்மை தவிர சட்டம் அல்ல. இவ்வாறு உணர வேண்டிய விடயங்கள் இந்து மதத்தில் நிறைந்து கிடக்கின்றன இவற்றை உணர்ந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அன்றி இந்து மத நூல்களை கற்றுவிட்டால் மட்டும் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.//
இதையும் அவர் எனது சொந்தக்கருத்து என்று நிராகரித்து விட்டார்

ஐயா மரைக்காயரே இறைவனே உணரப்பட வேண்டியவன் என்று தான் இந்து மதம் சொல்கிறது. வேதங்களோ, வேறு நூல்களோ ஒவ்வொரு பொருளையும் இறைவனாகிய பிரம்மம் இது அன்று, இது அன்று, இதுவும் அன்று என்று தான் கூறுகின்றதே தவிர இது தான் பிரம்மம் என்று வறையறுத்து சொல்லவில்லை. இறைவன் அவ்வாறு வரையறுக்கவும் முடியாதவன்.

அப்படி வறையறுத்து சொல்ல முடியாதவனை நாம் அடைய வேண்டுமானால் முதலில் அவனைப்பற்றி உணரவேண்டும். அவனை உணர்வது என்றால் எமது புலண்களால் உணரப்படும் உணர்வு அல்ல. அது ஆத்மார்த்தமான ஞானத்தினால் உணரப்படும் உணர்வு அங்கே புலண்களுக்கு இடமில்லை. இவ்வாறு இறைவனை உணர்வதற்கு வேதங்களும் ஏனைய நூல்களும் வழிகாட்டுகின்றன. ஆனால் அவற்றை கற்று விட்டால் மட்டும் இறைவனை உணர்ந்துவிட முடியாது அவை சொல்லும் வழியில் நாம் சிந்தித்து தெளிவு பெற்று கற்றதுக்கேற்ப ஆன்மீக வழியில் ஒழுகினால் மட்டுமே இறைவனை உணரமுடியும். அவ்வாறு இறைவனை அடைவதே உணரப்பட வேண்டியது என்றால் ஏனைய அனைத்து விடயங்களும் அப்படித்தான் இருக்க முடியும். நாம் எதையும் இலகுவில் கற்றுவிடலாம் ஆனால் அதனால் எதையும் அடையமுடியாது. ஐயம் தீர கற்றதை உணர்ந்து கற்றதன் படி ஒழுகினால் தான் கற்றதனால் பயன் . இது எல்லா வகையான கல்விக்கும் பொருந்தும். நீங்கள் பெருமையுடன் சொல்கிறீர்களே இந்து மத வேதங்களைக் கற்றுணர்ந்து அதில் விற்பன்னரான "சஞ்சய் த்விவேதி ஆச்சாரியா" என்பவர் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் என்று அவர் வேதங்களை கற்று மட்டுமே இருக்கிறார் கற்று உணர்ந்து இருந்தால் அவர் இன்று மதம் மாறியிருக்கமாட்டார். இதிலிருந்தே தெரிகிறது அவர் வேதங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார் என்று

இறைவழிபாடு பற்றி ஒரு கதை இருக்கிறது

பிரம்மாவின் புதல்வரான நாரதர் என்ற தேவ ரிஷி இருக்கிறார். அவர் சதா சர்வ காலமும் நாராயனின் நாமத்தை ஜபித்துக்கொண்டு இருப்பார். ஒருமுறை அவர் நாராயனிடம் சென்று சதா சர்வ காலமும் தங்களின் பெயரை ஜபிக்கும் என்னை விட சிறந்த பக்தன் இந்த பதிநான்கு உலகிலும் கிடையாது என்று ஆணவ மேலீட்டுடன் கூறினார் அதற்கு நாராயனன் சிரித்துவிட்டு உன்னை விட சிறந்த பக்தன் பூவுலகில் இருக்கிறான் என்றார். அப்போது நாரதர் கேட்டார் அவன் யார்? அவன் தினமும் எத்தனை தடவை தங்களை நினைக்கிறான் என்று ? நாராயனன் அதற்கு அவன் ஒரு வறிய குயவன் அவன் காலையில் நித்திரைவிட்டு எழும்போது ஒருதடவை என்னை நினைப்பான். பிறகு தனது தொழிலை பார்க்க சென்று விடுவான் தனது கடமைகளனைத்தினையும் முடித்து இரவு நித்திரைக்கு செல்லுமுன் ஒரு தடவை என்னை நினைப்பான் இப்படியாக அவன் என்னை தினமும் இரண்டு தடவை நினைக்கிறான் அவனே எனது சிறந்த பக்தன் என்றார். நாரதர் அதற்கு நான் தினமும், எந்நேரமும் தங்களைத்தான் நினைக்கிறேன் அப்படியிருக்க தினமும் இரண்டு தடவை மட்டுமே தங்களை நினைப்பவன் எப்படி என்னைவிட சிறந்த பக்தனாக முடியும்? நான்தான் சிறந்த பக்தன் என்றார். நாரதரின் கர்வத்தை அடக்க நினைத்த நாராயனன் ஒரு நாள் நாரதரை அழைத்து ஒரு கிண்ணம் நிரம்பி வழிய எண்ணையை ஊற்றி அதை நாரதரிடம் கொடுத்து ஒரு சொட்டு எண்ணைகூட நிலத்தில் சிந்தாதவாறு உலகம் முழுக்க நடந்து சுற்றி வர வேண்டும் என்று பணித்தார். நாரதரும் எண்ணைக் கிண்ணத்தை கவணமாக கொண்டு வழியில் சந்திப்பவரை எல்லாம் "விலகும் விலகும் எண்ணை சிந்திவிடப் போகின்றது" என்று கூறிக்கொண்டு வெற்றிகரமாக ஒருதுளி எண்ணை கூட நிலத்தில் சிந்தாதவாறு நாராயனிடம் சென்று " நான் வெற்றிகரமாக தாங்கள் சொன்னதைப் போல் செய்துவிட்டேன்" என்றார். நாராயனனோ புன்னகையுடன் " இன்று எத்தனை தடவை என்னை நினைத்தாய்? " என்று கேட்டார். பேந்தப் பேந்த விழித்த நாரதர் " இன்று தான் நீங்கள் எனக்கு வேலை தந்துவிட்டீர்களே அதனால் இன்று உங்களை நினைப்பத்ற்கு நேரமிருக்கவில்லை" என்றார். நாராயனன் " இப்பொழுது தெரிகிறதா யார் சிறந்த பக்தன் என்பது ?" என்று கேட்டார் நாரதரும் தனது கர்வத்தை உணர்ந்து திருந்தினார்.

இதிலிருந்து நமது கடமை தான் முதலில் என்றும் இறைவழிபாடு என்பது அடுத்தபடிதான் என்பதும் நன்கு புலப்படுகிறது. அத்துடன் இந்துமதத்தில் இறைவனை வழிபடாவிட்டாலும் அவனுக்கு எந்த உலகத்திலும் தண்டனை கிடயாது. அதேபோல் இறைவனை எப்படி வழிபட்டாலும் ஒருவன் செய்கின்ற பாவங்களுக்கு எந்தவித மன்னிப்பும் கிடயாது அவன் செய்த வினைப்பயனை அவன் அனுபவிப்பான். ஏனென்றால் இறைவன் மனிதனுக்கு ஆறறிவைப் படைத்துள்ளான் நன்மை எது தீமை எது என்று மனிதனுக்கு தெரியும். மனிதன் சிந்தித்து அதன் படி அவன் நன்மை செய்தால் மறு உலகிலும் அடுத்தபிறவியிலும் சுகத்தையும் தீமைசெய்தால் மறு உலகிலும் அடுத்தபிறவியிலும் துன்பத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். கூடவே மன்னிப்பு என்பது மீண்டும் தவறு செய்ய உந்துதலாக இருக்கும். இந்த கன்மம் எனப்படுகின்ற இருவினை (நல்வினை, தீவினை) எப்போது களையும் என்றால் இறைவனை அடையும் போது இவை களைந்து விடும். இவ்வாறு இந்த வினைகள் அற்றுப்போகும் போது மீண்டும் பிறவி என்பது அற்றுப்போகும்.

இந்த இரு வினைகள் பற்றியும், இறையுணர்வைப் பற்றியும், இறைவனை உணர்ந்தவர், அவரின் குணங்கள், அவரை எப்படி இனங்காண்பது, எவ்வாறு பற்றியும் வேறு ஒரு பதிவில் விளக்குகிறேன்.

அடுத்து கோயில்களில் காசு வசூலிப்பது கோயில் பரிபாலனத்திற்கு தானே அன்றி இறைவன் தரிசனத்திற்காக அல்ல. தவிரவும் காசு வசூலிப்பதனால் கட்டுப்படுத்தப் படுவது பக்தர்கள் தானே அன்றி இறைவன் அல்ல. கோயில்களில் " இறைவா நீ எனது அனுமதி இன்றி யாருக்கும் தரிசனம் கொடுக்க கூடாது, நீ பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதானால் என்னிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க உன்னை அனுமதிக்கமாட்டேன்" என்று இறைவனிடமா பணம் வசூலிக்கிறார்கள்? கோயில் நிர்வாகிகள். இல்லையே, பக்தர்களிடம் தானே கேட்கிறார்கள்?

அறிவுடைநம்பி ஐயா அவர்களே இறைவன் ஒன்றும் கருவறைக்குள் ஒழிந்து கொள்ள வில்லை அவனுக்கு அந்த அவசியமும் இல்லை. மனிதர்கள் எமக்கெல்லாம் கூட ஒரு வீடு இருக்கிறது இறைவனுக்கு ஒரு வீடு வேண்டாமா? அதற்காகத்தான் கோயில், கருவறை எல்லாமே. நீங்கள் உங்கள் வீட்டில் வசிக்கிறீர்கள் என்பதற்காக "வீட்டில் ஒழிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகுமா? " அத்துடன் கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்பது திருமூலர் அருட்பாடல். அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, இடச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது. இன்னும் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஐயா ஆகமம், ஐதீகம் எல்லாம் கட்டுப்பாடுகள் அகாது. அத்துடன் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு, மஹாகும்பாபிஷேகத்தால் பிரதிட்டை செய்யப்பட்டு, காலங்காலமாக ஆகம முறைப்படி நித்திய, நைமித்திய, கிரியைகள் நடைபெறும் கோயில்களில் பரந்துபட்ட அன்பும் அருளும் உடைய இறைவன் மந்திரங்கள் மற்றும் கிரியைகள் மூலம் ஆற்றுப்படுத்தப் படுகிறானே தவிர கட்டுப்படுத்தப் படுவதில்லை. அறிவுடை நம்பி ஐயா அவர்களே தாங்கள் நினைப்பது போல் ஒரு நாளைக்கு மாத்திரம் இறைவனை இடம் மாற்ற முடியாது. ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் ஆகம முறைகள் மீறப்படுமாயின் நாட்டுக்கும், அரசனுக்கும் தான் கேடாகும் தவிர இறைவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை இதனால் ஆகம கட்டுப்பாடுகள் கூட இறைவனுக்கு அல்ல மனிதர்களுக்குத்தான் என்பது நன்கு புலப்படுகிறது. ஆகமத்தில் இடமிருப்பின் நீங்கள் சொல்வதுபோல் ஐயானாரையும், முனியாண்டியையும், சுடலை மாடனையும் நீங்கள் விரும்பும் கோயில்களில் வைக்கலாம், ஆகமத்தில் இடமில்லையெனில் நீங்கள் விரும்பும் கோயில்களுக்கு அன்மையில் புதிய கோயில்களை கட்டலாம். அதிகம் தேவையில்லை எனக்கு தெரிந்து பெரும்பாலான கோயில்களில், ஆகம முறைப்படி அமைந்த கோயில்களிலும் கூட ஐயானார், முனியாண்டி சுவாமி, கருப்பு சுவாமி போன்றோர் வீற்றிருப்பதைக் காணலாம்.

//சூத்திரன் காலனிக்குள் பார்ப்பன சாமிகள் வந்தால் கடவுளும் தீட்டாகி விடுவான் என்றானே சுப்பிரமணி. இதெல்லாம் கடவுளைக் கட்டுப்படுத்துவதாகாதா?//

இதெல்லாம் சுத்தமான அறியாமை. இறைவன் ஒருபோதும் தன் குழந்தைகளை பிரித்துப்பார்க்க மாட்டான். இவற்றினால் எல்லாம் இறைவனது பரந்துபட்ட அன்பும், கருணையும், அருளும் கட்டுப்படுத்தப் படுகின்றதா இல்லையே?

ஸயீத் ஐயா அவர்களே நாத்திகம் கூட இந்துமதத்தின் ஒரு உட்பிரிவு என்பதை தாங்கள் அறியாதவர் என்று நினைக்கிறேன். அதாவது வேத காலத்திலேயே எழுந்த உலகாயதத்தத்துவம் (சார்வாகத் தத்துவம்) இது இந்துமதத்தின் ஒரு உட்பிரிவாகவே கருதப்படுகிறது, இதை பிரஹஸ்பதி முனிவர் தோற்றுவித்தார் என்றும் சார்வாகமுனிவர் தத்துவரீதியாக பரப்பினார் என்றும் கூறப்படுகிறது. (வீர சாவர்க்கர் கூட நாத்திகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது).

இறைவனைப் பற்றி உணர்வதற்கு வேத, ஆகம, மற்றும் பல நூல்கள் வழிகாட்டுகின்றன. அதனால் அவ்வழியில் உணரப்படும் இறையுணர்வும் உண்மையாக காணப்படும். வழிகாட்டும் நூள்கலானவை தவறானவையாக இருக்கும் போது உணரப்படும் பொருளும் உண்மையற்றதாகிவிடும் இந்த நிலைமையே நாத்திகர்களின் நிலைமையாகி இருக்கின்றது.

இதன் மூலம் நாம் அறிவதெல்லாம் இறைவனனானவன் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அவன் கட்டுப்படுவதெல்லாம் உண்மையாண, தூய்மையான, தன்னலமற்ற அன்புக்கு மட்டுமேயன்றி வேறெதெற்கும் அல்ல என்பதும் நன்கு புலப்படுகிறது.

இந்தப்பதிவின் மூலம் யார் மனதயும் புண்படுத்தும் எண்ணமோ அல்லது யாரையும் குத்திக்காட்டும் எண்ணமோ கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, January 21, 2007

மரைக்காயர் ஐயாருக்கு எனது பதில்கள் 1

சிவமயம்

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவின் மூலம் என் இனிய இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்களின் மனதை புன்படுத்தும் நோக்கமோ அல்லது நகைக்கும் நோக்கமோ கிடையாது என்பதையும் மதிப்பிற்குறிய மரைக்காயர் ஐயார் அவர்கள் திரு எழில் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இடப்பட்டது என்பதையும் இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள் கன்னியமான சொற்பிரயோகங்களுடன் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்க்கிளைமர்: இந்த பதிவில் கன்னியமான சொற்களை பிரயோகிக்காத பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

டிஸ்க்கிளைமர்: இங்கே எனது வாதத்தின் மூலம் எதிர் தரப்பினர் மிகவும் கடுமையாக தாக்கப்படுவதை யாரேனும் உணர்ந்தால் தாக்கப்படுவது எதிர்க்கருத்து தெரிவித்த நபர் அல்ல அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்தே என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் வணக்கம். நான் அதிகம் கற்றுணராத இளைஞன் தயவு செய்து சொற்பிழைகள், எழுத்துப்பிழைகளை கவணத்திற்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை. அதற்குமுன் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.



இந்துமதமும் அதைப்பற்றிய புரிந்துண்ர்வும்.

இந்து மதம் என்ற சொல்வழக்கானது நவீன கால்த்தில் ஏற்பட்ட ஒன்றாகும். அது பிரித்தாணியரின் ஆட்ச்சிக்காலத்திலே இந்தியாவில் வழங்கிய இஸ்லாம், கிறிஸ்தவம் அகியவற்றை சாராத சமய நெறிகள் அனைத்தையும் பொதுமையிற் குறிப்பதாகும். ஆனால் வேதங்களை அதாரமாக கொண்ட சமயங்களே இந்துமதம் என்று வழங்கப்படுகின்றது. முற்காலத்தில் வழங்கப்பட்ட சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய அறுவகை சமயங்களையும் சம்பிரதாயபூர்வமாக ஷண்மதங்கள் என்று
கூறுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஷண்மதங்களைப் பற்றிய பேச்சு பொறுத்தமற்றதாகும். காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பன இன்று தனித்தனியாக வழங்கப்படவில்லை அவற்றிற்குரிய அம்சங்கள்
சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றோடு சங்கமமாகிவிட்டன. முன்னொரு காலத்தில் சைவமானது பரதகண்டமனைத்திலும் பரவிப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. " சுவர்ணபூமி" என்று சொல்லப்படுகின்ற காம்போஜதேசம், சம்பா சாவகம் முதலிய தென்கிழக்காசிய பகுதிகளிலும் அது பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. துருக்கியரின் அதிபத்தியம் ஏற்பட்டிருந்த காலங்களில் சைவத்திற்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 15ம், 16ம் நூற்றாண்டுளில் வட இந்தியாவிலும், மஹாரஷ்டிரத்திலும் ஏற்பட்ட சமயமறுமல்ர்ச்சியானது வைணவ சம்பிரதாயத்தின் மூலமாக பக்திநெறியை ஆதாரமாக கொண்டு ஏற்பட்ட ஒன்றாகும். இராமாணந்தர், கபீர்தாஸர், மீராபாய், துளசி தாஸர், சைதன்யர் முதலிய பரம பாகவதர்கள் அந்த இயக்கத்தை மேன்மை பெறச்செய்தனர். அதன் விளைவாக வடதேசமெங்கும் இந்துக்களிடையே வைனவம் பொதுவான சமயநெறியானது. இராமர் வழிபாடும், கிருஷ்ணர் வழிபாடும் பொதுவழக்காகி விட்டது ஆயினும் சிவனையும் சிவவழிபாட்டையும் அவர்கள் ஒதுக்கி வைக்கவில்லை. சிவராத்திரி முதலான விரதங்களையும் வட இந்தியாவில் அனுட்டிக்கின்றனர். அதேபோல் விநாயகருக்கும், முருகனுக்கும் வழிபாடாற்றும் அம்சம் வைணவராகிய இந்துக்களிடமும்

காணப்படுகின்றது. மத்திய காலத்திலே பெருவளர்ச்சியுற்ற சாக்தம் பெருமளவிற்கு சைவம், வைணவம் ஆகியவற்றோடு கலப்புற்றது. அதன் அம்சங்கள் அச்சமயங்களோடு இனைந்துவிட்டன.
(மூலம் : இலங்கையில் இந்து சமயம்
வெளியீடு : அகில இலங்கை இந்துமாமன்றம் + குமரன் புத்தக இல்லம்.)


இன்று உலகமெல்லாம் பரந்துவாழும் இந்துக்களில் பெரும்பாலானோர் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும் விஸ்னுவழிபாடும் அவர்களிடம் காணப்படுகின்றது. அதேநேரம் விஸ்னுவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் வைணவ சமயமும் இன்று நடைமுறையிற் காணப்படுகின்றது. இருப்பினும் வைணவ சமயமும் சேர்ந்ததுதான் தான் இந்துமதம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதை ஏன் இங்கே தெரிவிக்கிறேன் என்றால் எனது நண்பர்கள் பலரிற்கு இந்த விடயம் புரியாமல் உள்ளது.

சரி மரைக்காயர் ஐயாரே உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்
இதுதானே உங்கள் முதலாவது கேள்வி

1. கடவுள் யார்? அல்லது யாவர்?


இந்து மதத்தில் கடவுளர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சிவன், விஸ்னு, அம்மன், காளி ஐயப்பன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அத்தோடு
இந்த பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பன்றி - வராகமூர்த்தி

நாய் - பைரவமூர்த்தி

மாடு - கோமாதா

யானை - கணபதி

சிங்கம் - நரசிம்மாவதாரம்

மீன் - மச்சாவதாரம்

முதலை - கூர்மாவதாரம்

மாட்டிடையன், பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்

குரங்கு - அனுமன்

சுடலைப் பித்தன் - சிவன்

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்

பாம்பு- நாகராஜன்

மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி

வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்

இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் இவர்களில் ஒருவரை அல்லது பலரை அல்லது அனைவரையும் தத்தமது விருப்பப்படி வணங்களாம்.
இப்படியாக இந்து மததில் அதிகமான கடவுளர் இருந்தாலும் அவை யாவுமே ஒரே இறைவனாகிய பிரம்மத்தின் அவதாரமே. அதாவது இந்து மதத்தில் எந்த இறைவனை வணங்கினாலும் வணங்கப்படுவது என்னவோ முலுமுதற் கடவுளாகிய (பிரம்மமாகிய) பரமேஸ்வரனே ஆகும்.

அப்படியானால் அதாவது அனைத்துக் கடவுளரும் ஒரே பிரமத்தின் அவதாரம் என்றால் ஏன் பல கடவுளர்கள் அவதரிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்

இத்தனை கடவுள் அவதாரங்கள் எதற்கு என்றால் இறைவனிடம் வரம் பெற்று தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்திய அசுரர்களை அழித்து தேவர்களையும் மனிதர்களையும் காக்கும் பொருட்டு மேற்கொண்டவையே இந்த அவதாரங்கள்.

அப்படியேயானாலும் பிரம்மத்தினால் அவதாரம் எடுக்காமல் நேரடியாக இந்த அசுரர்களை அழிக்கமுடியாதா? என்று நீங்கள் கேட்கலாம்

அதாவது பிரம்மமாகிய இறைவன் பக்தர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் அவன் பக்தர்கள் உண்மையான அன்புடன் எதைக் கேட்டாலும் வழங்குவான் அதற்காக பக்தர்கள் கொண்டுள்ள அன்பு உண்மையானதா என்பதை அறிய கடுமையான சோதனைகளையும் ஏற்படுத்துவான். தூய்மயான, உண்மையான அன்பினால் இறைவனை வசப்படுத்திவிடலாம். அசுரர்கள் எனப்படுபவர்கள் கடுமையான தவம் புரிந்து தமது அன்பின் வலிமையினால் இறைவனிடம் தமக்கு இஷ்ட சித்திகளை பெற்று விடுவர். முக்காலமும் உணர்ந்த இறைவனும் அவர்களுக்கு வாரி வழங்குவான் அவன் தான் இல்லை என்னும் சொல் அறியாதவனாயிற்றே.

"அசுரர்கள்" என்ற பெயர் இவர்களுக்கு ஏன் வந்ததென்றால் இவர்கள் தாங்கள் எண்ணிய கருமத்திலும் கொண்ட இலட்சியத்திலும் மிகவும் உறுதியாக இருந்து இறைவனிடமிருந்து இஷ்ட வரங்களை பெறுவதில் அசுரத்தனமான உறுதியுடன் இருப்பதால் இப்பெயர் வந்தது. இப்படியாக இவர்கள் இறைவனை அன்பினால் வசப்படுத்தி தமது இஷ்ட சித்திகளையும் தமது அன்பினால் தம்மை எளிதில் யாராலும் வெல்ல முடியாதவாறன வரங்களையும் இறைவனிடமிருந்து பெறுவர். இவர்கள் வரம் பெறும் போது என்னவோ நல்லவர்கள் தான் ஆனால் தாம் பெற்ற வரங்களினாள் மமதை கொண்ட அசுரர்கள் ஆணவத்தினால் தீயவர்களாகி தேவர்களையும் மானிடர்களையும் மற்றும் அனைவரையும் துன்புறுத்தும் போது இறைவன் அவர்களுக்களித்த வரத்தினால் (வாக்குறிதியினால்) நேரடியாக அவர்களை அழிக்க முடியாது அதனால் அவர்களுக்களித்த வரத்தின் படி அவர்களை அழிப்பதற்கு ஒவ்வொறு அவதாரங்களாக எடுக்கவேண்டியதாகி விடுகிறது இவ்வாறு இறைவன் எடுத்த அவதாரங்களினால் துயர் களையப்பெற்ற தேவர்களும், மானிடர்களும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அவ்வவதார மூர்த்திகளை வணங்குகின்றனர். இறைவன் என்னவோ தான் வழங்கும், வழங்கிய வரத்தினால் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கபோகிறது என்பதை எல்லாம் நன்றாகவே அறிவான் ஆயினும் அவனோ உண்மையான, தூய்மையான அன்பிற்கு கட்டுப்பட்டவன் ஆதலால் அவனால் அவன் பக்தன் கேட்பதை மறுக்கமுடியாது.

இந்துமதம் ஒரு கூட்டுக்குடும்பம் போன்றது அதில் இறைவனானவன் ஒரு குடும்பத் தலைவன் போன்றவன். ஒரு குடும்பத் தலைவன் தன் குழந்தைகளுக்கு அப்பாவாகவும், மனைவிக்குக் கணவனாகவும், மருமகனுக்கு மாமனாராகவும், பேரக் குழந்தைக்கு தாத்தாவாகவும் பல்வேறு அம்சமாய்த் திகழ்கிறான். இதனால் ஒரே குடும்பத் தலைவன் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதால் அவன் வெவ்வேறு நபர்களாகி விடுவானா என்ன? இதைப் போலதான் இறைவனும். இந்துமத கூட்டுக் குடும்பத்தில் பரம்பொருளான இறைவன் குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு தெய்வ மூர்த்திகளாக பல்வேறு பெயர்களில் அவரவர் இஷ்டத்திற்கேற்ப அழைக்கப்படுகிறான், வணங்கப்படுகிறான்.

//கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்?//

இப்போது புரிகிறதா மரைக்காயர் ஐயாரே எந்த வகையில் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் என்பது?

சரி அடுத்த விடயம் : நீங்கள் சுட்டிக்காட்டினீர்களே விப்ர புரானத்தில் கடவுளர் என்று அவர்கள் கடவுளர் அல்ல, தேவர்கள் என்பதை தாங்கள் அறிவீறா? இறைவனானவன் (பிரம்மம்) தேவர்களால் கூட இலகுவில் அடையமுடியாதவன் என்பதையும் தாங்கள் அறிவீறா?

இதை சாம வேததின் உபனிடதங்களுள் ஒன்றான "கேனோபநிடதத்தின்" நான்காவது பாகம் மிகவும் அழகாக விளக்குகிறது

அது மட்டுமள்ள இந்து மதத்தில் புராணங்கள் என்ற பெயரில் அநேகமான நூல்கள் காணப்படினும் அவற்றில் (இந்துக்களால்) மிக முக்கியமானதாக கொள்ளப்படும் புராணங்கள் பதினெட்டு அகும் அவை மஹா புராணங்கள், பதினென் புராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அவை பின்வறுமாறு

  1. பிரம்ம புராணம்
  2. பதுமப் புராணம்
  3. வைணவ புராணம்
  4. சைவ புராணம்
  5. பாகவதம்
  6. பவிஷ்ய (பெளடீக) புராணம்
  7. நாரகிய புராணம்
  8. மார்க்கண்டேய புராணம்
  9. ஆக்கினேய புராணம்
  10. பிரம்ம கைவர்த்தன புராணம்
  11. இலிங்க புராணம்
  12. வராக புராணம்
  13. வாமண புராணம்
  14. கூர்ம புராணம்
  15. மற்ச புராணம்
  16. காகுட புராணம்
  17. ஸ்காந்த புராணம்
  18. பிரமாண்ட புராணம்

இப்பதினென் புராணங்களின் பட்டியலில் நான் எவ்வளவோ முயன்றும் தாங்கள் சுட்டிக்காட்டிய விப்ர புராணத்தை கண்டு பிடிக்க முடியவில்லையே மரைக்காயர் ஐயா(?). அது மட்டுமல்ல ஒரு புராணத்தில் உள்ள ஒரே ஒரு கதையை மட்டும் வைத்துக்கொண்டு அந்த புராணமே பிழையானது என்று சொல்வது எந்த வகையில் முறையாகும் மரைக்காயர் ஐயாரே ?

தாங்கள் என்னவென்றால் இந்த ஒரு கதையை வைத்துக்கொண்டு புராணம் மட்டுமல்ல இந்து மதமே தவறு என்று வாதிடுவது எந்த அடிப்படையில் ?

அடுத்தவிடயம்: இங்கே இலங்கையில் எனக்கு தெரிந்தவரை யார் வேண்டு மானாலும் எந்த இந்துக்கோயிலுக்கும் செல்லலாம் எந்த தடையும் இல்லை அவர் கிருஸ்த்தவராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி எந்த ஜாதியாக இருந்தாலும் கொயிலுக்கு செல்ல எந்த தடையும் இல்லை. இவ்வளவு ஏன் எத்தனையோ இஸ்லாமியர்கள் இந்துக் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை என் கண்களாளேயே கண்டிருக்கிறேன். அது மட்டுமல்ல இலங்கையில் நான் பிறந்த ஊரில் எனது பாட்டனார் கட்டிய கோயில் கூட இன்று நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் (எனக்கு இந்த ஜாதி பேதமெல்லாம் தெரியாது) பராமரிப்பில் தான் இருக்கிறது என்று அறிகிறேன்.

// // உங்களுக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமின்மையால் தாங்கள் இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்றீர்கள். //

உண்மைதான். எனக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமில்லைதான். அதனால்தான் எழில் போன்ற சான்றோர்களிடம் இந்து மதம் பற்றிய கேள்விகளை முன்வைக்கிறேன். ஆனால் சரியான பதில்தான் கிடைப்பதில்லை. நான் இந்துமதம் பற்றி விமரிசனங்கள் தெரிவிக்கிறதாக சொல்லியிருக்கீங்க. அப்படியில்லை. நான் இதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்//

என்று பின்னூட்டத்தில் தாங்கள் இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்கிறீர்கள் அப்படியானால் இதற்கு என்ன பெயர் ஐயாரே?

அது போகட்டும் ஐயா ஏக இறவனை வழிபடும் தாங்கள் இங்கே கூறப்பட்டுள்ள விடயத்தை கடவுளாக ஏற்றுக்கொள்கிறீர்களா?

மதிப்பிற்குரிய மரைக்காயர் ஐயார் அவர்களே நான் தங்களைப்போல் அதிகம் கற்றிராத இளைஞன். எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் தங்கள் வினாக்களிற்கு விடையளிக்க முற்பட்டிருக்கிறேன் தங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று கருதுகிறேன் இன்னும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்.

எனது வசன நடை யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் எனக்கு தெரிந்த வசன நடை இதுதான். அத்துடன் இதுதான் எனது முதல் எழுத்துப் படைப்பும்கூட இதற்கு முன் எழுதிய அனுபவம் கிடையாது.

தங்களது ஏனைய வினாக்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் விடை தருகிறேன்.

எனது அடுத்த பதிவு இறைவனை கட்டுப்படுத்த முடியுமா?

நன்றி.

Friday, October 27, 2006

உண்மையாண இந்துக்கள்

சிவமயம்

உண்மையாண இந்துக்கள் என்போர் யார்?
இந்துவாக இருந்துகொண்டு இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா? என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இந்துக்களாக பிறந்த அனைவரும் உண்மையாண இந்துக்கள் அல்ல. என்ன காரணம்? இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் உண்மையாக இந்து தர்மத்தை கடைப்பிடிக்கிறோமா? என்பதைத்தான் கவணிக்கவேண்டுமே ஒழிய இந்துவாக பிறந்துவிட்ட அனைவரும் உண்மையாண இந்துக்கள் அல்ல.

என்னடா யார் இவன்? எங்கிருந்துவந்தான் என்று ஒன்றுமே தெரியாது அதிலும் வேறு ஏதேதோ உளறுகிறான் என்று பார்க்கிறீர்களா சரி முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.

அகவை இருபது மட்டுமே நிரம்பிய சாதாரண இளைஞன். இலங்கையில் இருந்து வலைப்பதிகிறேன். எனது முதல் வலைப்பதிவு இதுதான். வலைப்பதிவு உலகத்திற்கு வந்தோரை வாழ்த்தும் உங்கள் அனைவரின் ஆதரவை நாடி நானும் வருகிறேன். எமக்குள் கருத்தளவில் முரண்பாடுகள் இருந்தாலும் நட்பு ரீதியில் எந்த முரண்பாடுகளும் இல்லாதிருக்க வேண்டுகிறேன் அத்தோடு வலைப்பதிவுலகில் நிறைவாக கற்ற அறிஞர்கள் நிறையவே இருக்கிறீர்கள் நான் தங்களைப்போல் அதிகம் கற்றிராத இளைஞன் என்னிடம் தவறுகள் இருப்பின் அவற்றை தாங்கள் சுட்டிக்காட்டினால் இன்முகத்துடன் திருத்திக்கொள்வேன்.

இனி விஷயத்திற்கு வருவோம். இந்துக்களாக பிறந்த நாம் அனைவரும் உண்மையாக இந்து தர்மத்தை கடைப்பிடிக்கவிள்ளை இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இதை மறுக்கமுடியாது. இவ்வாறிருக்கையில் இந்து தர்மம் சொல்வதை எல்லாம் இக்காலத்தில் கடைப்பிடிக்கமுடியாது என்று வாதிடுபவர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் உண்மை அதுவல்ல இந்து மதம் அனைவரும் கடைப்பிடிக்கக்கூடிய அடிப்படையான ஒரு தர்மத்தை சொல்கிறது அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதான் " அன்பே சிவம் ". அதாவது அன்பு என்ற ஒன்றே ஈசன் என்று சொல்கிறேன். இந்த அன்பினால் இறைவனை இலகுவாக அடையமுடியும்.

அதாவது இங்கே அன்பு என்பது நமக்கு பிடித்தவர்களின் மீது மட்டும் செலுத்தப்படுவது என்ற வரையறையை தாண்டி " அனைவர் மீதும், ஏன் உலகின் அனைத்து ஜீவராசிகள் மீதும் பயன்கருதாமல் செலுத்துவதாக இருக்கும் அதேவேலை அது ஜாதி, மதம், மனிதன், மிருகம்,உயர்திணை, அஃறிணை போன்ற எந்தவித பாகுபாடும் பார்க்காத, எந்த ஒரு ஜீவனுக்கும் உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் எந்த ஒரு தீங்கும் ஏற்படாமலும், ஏற்படுத்தாமலும் இருக்கும் நிலையையே குறித்து நிற்கின்றது ". இந்த "அன்பு" என்பதற்கு இந்து மதம் கொடுக்கும் வரைவிலக்கணம் இதுதான்.

எம்மில் எத்தனை பேர் இன்று இந்து மதம் சொல்கின்ற இந்த அடிப்படை தர்மத்தையாவது கடைப்பிடிக்கிறோம்? அதிகம் தேவையில்லை இந்துக்களாகிய எம்மில் எத்தனை பேர் இன்று புலால் மறுக்கிறோம்?. "இலங்கிடும் உயிர் அனைதும் ஈசன் கோயில்" என்பது சைவ மரபு. ஈசன் வழிபாடு இரண்டு வகை. ஒன்று கோயில் வழிபாடு மற்றொன்று எல்லா உயிர்களிடத்தேயும் அன்பு செலுத்துவதாகிய உயிர் வழிபாடு. ஆலயமும் உயிரும் முறையே "படமாடும் கோயில், நடமாடும் கோயில்" என்று திருமூலர் கூறுகிறார் இதில் நடமாடும் கோயில் வழிபாடே சிறந்தது. அதற்காக கோயில் வழிபாடு தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அதற்கும் ஒருகாரணம் உண்டு அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

இங்கே அன்பை பற்றி கூறினோம் அது பயன் கருதாததாக இருக்கவேண்டும் என்று கூறினோம் இங்கே "பயன்"க்கு என்ன வேலை என்று பார்ப்போம் உதாரணமாக ஒரு பால்க்காரனை எடுத்துக்கொண்டால் அவன் தினமும் இரண்டு, மூன்று வேளை பசுவுக்கு உணவு, நீர் என்பவற்றை கொடுக்கிறான் ஏன், அவனுக்கு அந்த பசுவின் மூலம் பால், மற்றும் பல (பணமும் கூட) பயன்கிடைக்கிறது அதனால் அவன் பசுவின் மேல் அன்பு காட்டுகிறான். இது நான் சொல்கின்ற அன்பு கிடையாது. நான் சொல்வது என்னவெனில் " எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு உயிரையும் தேவையேற்பட்டாலோ, தேவையேற்படாமலோ எந்த வகையிலும் வருத்தாது இருத்தல்வேண்டும். (தன்னுயிரே போகும்நிலை வந்தாலும் கூட கொல்லாமை வேண்டும்) " என்பதாகும். திருவள்ளுவரும் கூட இதைத்தான் சொல்கின்றார். இவ்வறான அன்பை உடையவன் ஈசன். அவனின் அன்பை நாம் "அருள்" என்கிறோம் அது எல்லா உயிர்களையும் தழுவியது அதற்கு பாகுபாடு கிடையாது அவ்வாறான அவனின் அன்பை அடைய ஜீவகாருண்யத்துடன் அவன்வழியில் (அன்பின் வழியில்) அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அன்பாக உறையும் ஈசனை இலகுவில் அடையமுடியும். ஆகவே எவனொருவன் ஜீவகாருண்யத்துடன் அனைத்து உயிர்களிடத்தும் பயன் கருதாத அன்பு செலுத்துகிறானோ அவனே உண்மையான இந்து.









இந்து மதமும் ஜாதியும்.

சிவமயம்
இன்று உலகமெங்கும் பரந்து விரிந்து காணப்படும் சமயங்களுள் முதன்மையானது இந்து மதம் ஆகும். ஆனால் இந்து மதத்தவர் மத்தியில் இந்து மதம் பற்றிய உண்மையான அறிவின்மையால் "ஜாதி" என்ற பெயரில் மனிதர்கைளை இனம்பிரித்து பல்வேறு சமூக முரன்பாடுகளையும் ஏட்படுத்திக் கொண்டுள்ளனர் இந்த "ஜாதி" யை பற்றி விளக்குவதாக இந்த கட்டுரை அமையும்.

இந்த கட்டுரையில் பிரசுரிக்க எடுத்துக்கொண்ட நூலை இய்ற்றியவர்
சிங்கை ஜனனதூதன் பத்திராதிபர் இ. ம. தைரியர் அவர்களாவர்.

நன்றி நூலகம் திட்டம் (noolaham.net).

அநாதிநம
Caste System

முகவுரை

வருண நிலை

இப்பூவுலகின்கண் னுற்பவித்து அட்டதிசைகளில் பரம்பியிருக்கும் மானிடர் எத்தனையோ கோடானுகோடியென மதிக்கொணாது. காலத்திற்குக் காலம் அவதி மரணத்தினாலும் யுத்த அக்கிரமத்தினாலும் மாண்டு பூமாதேவியின் பாரத்தைச் சாந்தியாக்கினவர்களின் தொகையையும் கணிப்பதரிது. மானிடருள் இரு வகுப்பினருளர். இவரை ஆண் பெண்ணென்றார் சான்றோர். ஆனது பற்றி மானிடருள் இரு சாதிகளின்றி மறுசாதிகளிலரென ஞானிகளுபதேசிக்கின்றனர். இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோரென வேறு சாஸ்திரிகள் சாதிக்கின்றனர். அதாவது, புண்ணிய வழிபாட்டி லொழுகுவோர் மேற்குலத்தவர், துர்மார்க்கத்தில் துடியாட்டஞ் செய்வோர் இழிகுலத்தவரென்றர்த்தமாகும். இன்னும் இந்திய இதிகாசங்களை விரித்துச் சீர்தூக்கி வியாக்கியானஞ் செய்யுங்கால் "சாதியேது காணும் ஆண்டே சைவமேது காணு" மென்ற சூத்திரத்திலடங்கி யிருக்கின்றது. "நாற்பாற் குலத்தில் மேற்பாலொருவன் கற்றிலனாகிற் கீழிருப்பவனே" யெனத் திருவள்ளுவநாயகர் திருவாய் மலர்ந்தருளி யிருக்கின்றனர். இது, கல்விமானகளே யுயர்குலத்தவர், கல்லாத மாந்தரிழிகுலத்தவரெனுந் தாற்பரியத்தை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றது.
இந்தியாவிற் பல்லாண்டுகளாய் நாம் வசித்தோம். பல வகுப்பினருடன் சகவாசஞ் செய்தோம். வருண நூற்களைக் கற்றுணர்ந்தோம். பேழைதனைப் போல் வயிறு கொண்ட பார்ப்பார் பிழைப்பதற்குச் சாதிபேதத்தைக் கட்டி வைத்தாரென நம்மறிவிற் புலப்படுகின்றது.இச் சாதிபேத விஷயமே இந்திய இலங்கைச் சுதேசிகளைத் தலைகீழாய் விழுத்திவிட்டது. எக்காலமும் பதினாறு பிராய மார்க்கண்டேதர் போலிராமல், சாதிப் பேதத்தினாற் கேடுற்றுப் படாதபாடுற்றுச் சீதேவியாகிய சுதேச நாடிழந்து, மான் வேட்டையாடச் சென்றவன் புலி முகத்தில் தென்பட்ட விதமாய்ப் பரிதாப நிலையிலாகினர். ஐயையோ! எம்பெருமானினி யென்சய்வன்!!
இப்பரிதாப மொருபாலிருக்கச் சாதிக் கோட்பாட்டின் நிலை அதிக அநுதாபத்திற் கிடமாயிருக்கின்றது. தற்காலத்தில், கீழ்த்தரமாய் மதிக்கப்படா நிற்கின்றவர்கள் இந்து இதிகாச விதிப்படி அந்நிரையைச் சார்ந்தவர்களல்லர். அன்றியும், சில வருணப் பெயர்கள் நசுங்கித் தேய்ந்து ஒடுங்கி முடங்கியு மிருக்கக் காண்கிறோம். இவ்விஷயத்தை சுருங்கச் சொல்லி விளக்குவதற்கே இந்நூலை யியற்றத் தலையிட்டோம்.

"பொருந்திய குறைகணோக்கிற் புனைந்தமட் கலத்தைப்பாராதருந்துய வமுதுந்ன்றே லருத்தியோ டருந்தல் செய்வார்"

இவ்வசன நடையில் யாது குறைகளைக் கற்றோர் கண்டால் ஏந்திய மட்பாத்திரத்தைப் பாராததிலடங்கிய அமிர்தம், உண்பதற் கின்பமாயிருப்பி னதை யாசையோடருந்துவார்களாக.

மரபுங் கிளையும்

மனுக்கோட்டின் பிரகாரம் நான்கு வருணங்களுள. அவை: பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரரேயாம் மனுவென்பவர் பிர்மாவின் புத்திரரென்றும், மானவ நூலை யியற்றினவரென்றும் இந்துக்களின் கொள்கை. இந்நூல் அட்டாதச தரும நூல்களிலொன்று. மேற்கூறிய வருணங்களுள் நானாவித பிரிவுகளுமுள.

பிராமணர்

பிரம வென்பது பிராமணர், பார்ப்பார், இரு பிறப்பாளர் (Twice born). அந்தணரேயாம். இவர்கள் நான்முகக் கடவுளின் முகத்தினின் றுற்பத்தியானபடியால், எற்றமேல்குல முயர்ந்தோரென மனுக்கோட்டிற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வித யோக திசையில் ஜென்மித்த பிராமணரின் தொழில் யாதெனப் பின்வரும் பா இன்பமாய்க் கூறுகின்றது.

"ஓதலே பிறர்க்குத் தாமே யோதுவித்திடுதல் மிக்க
வேதவேள்விக ளியற்றல் வேட்பித்தல் வேட்டபேர்க்கே
ஈதலீந் திடுவோர் தம்பா லேற்றிட லேற்பதாக
வாதிநான் மறையோர் செய்யுமறு தொழிலாகு மன்றே"

செபதபதானஞ் செய்தல், மற்றோரை யவ்வழிப்பாட்டிலமைத்தல், வேதத்தை விளக்கிக் காட்டல், தருமம் புரிதலென்பனவேயாம். இத் தொழில்களைச் சாதிபேதமின்றியும், வறியோர் சிறியோரென்றும் பாராது, மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து வருபவன் அந்தணன் அல்லது குருவென்ற வரிய நாமதேயத்திற்குரியவன். செல்வமின்றித் தொல்லைப்பட்டு வள்ளுவத் தொழிலிலும் பறைசாற்றும் வேலையிலும் அமைக்கப்பெற்ற இனபந்துகளாகிய பறையரை, ஈனரென் றெண்ணியவர்களைக் கண்டவுடன், குண்டியைக் காட்டித் தடல்பிடல் செய்யும் பிராமணர், நான்முகக் கடவுளின் திவ்விய முகத்தினின் றுதித்தாரென்பது இந்தப் பொய் கந்தப்புராணத்திற் கிடையாதென்ற பேச்சுக் கிலக்காயிருக்கின்றது.

சத்திரியர்

சத்திரியர் நான்கு வருணத்தவருள் இரண்டாம் மரபினர். இவர்கள் இராஜீக ராணுவ குலத்தோர். இவ் விஷயத்தைக் குறித்து நிகண்டை விரித்துப் பரிசோதித்துப் பார்த்தால், இவர்கள் குருகுல வேந்தரென்றும், கௌரவர், பௌரவர், பரதரென்றும் அங்கு காணப்பட்டிருக்கின்றது. "பரவுபாரதரேமற்றப் பௌரவரென்னும் நாமங் குருகுல வேந்தர்க்காகுங் கௌரவரென்றுங் கூறும்" கௌரவர் குருராஜனின் வமிசத்தவர்கள். குருராத்தா அல்லது குருநாட்டில் (டெல்ஹி) நடந்த யுத்தத்திற் கௌரவர் தோல்வியடைந்து, மத்திய இந்தியாவி லடைக்கலம் புகுந்தனர். அதன் பின்னர் தென்னிந்தியாவை நோக்கிச் சென்றனர். இவர்கள் இராணுவ சாஸ்திர விற்பன்னரானபடியால் இலங்காபுரியைப் பல்லாண்டுகளாய்ப் பரிபாலனஞ் செய்த பராக்கிரமபாகு வென்பவர் இவர்களை வரவழைத்து, இலங்கைப் பாதுகாப்புக்காகக் கரையடுத்த நாடுகட் கதிபதிகளா யிவர்களை நாட்டினர். இவ் விஷயத்தினாலிவர்கட்குக் கரையாளரென்னுங் காரணப் பெயர் சூட்டப்பட்டது. கரையாளரென்னுந் நாமத்தை ஆங்கிலேயத்தில் பாஷாந்தரஞ் செய்யுங்கால் Naval Forces என்ற அருத்தத்தைத் தரும். மஹா வித்துவான் சைமன் காசிச் செட்டி (Simon Cassie Chetty) அவர்களரங்கேற்றிய அரிய பிரபந்தத்தில், கரையாளர், சத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்கள்; நாடு நகர்களை யாண்டு பரிபாலனஞ் செய்தவர்களென அவர் கூறியிருக்கின்றனர். ஆனது பற்றி யிவர்கள் குருகுல வமிசத்தவர்கள். "கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்." தாஸ் பூஸ் தஞ்சாவூர் ஈஸ்பூ சென்று இதிகாசங்களைக் கற்றுணரா மாந்தரினிரு விழிகளிரு புண்களாம். இப் புண்களையுடையோர், குரங்குக்குந் தன்குட்டி பொன்குட்டி (The monkey praises its own tail) யென்றவாறாய் இதிகாசங்களை வேற்றுமைப் படுத்துவர். சம்பூரண கல்விக் கண்களையுடையோர், யாது மரபினராயினும் சத்தியந் தவறாதவர். இவ்வகுப்பினருள், தெல்லிப்பளை வாசியும் ஞானாந்த புராண ஆசிரியருமாகிய மஹா வித்துவான் தொன்பிலிப்பு அவர்களொருவர். யாழ்ப்பாணக் கௌரவ அல்லது கரையாளர் மரபுதித்த தொதியோகு முதலியாரைக் குறித்து, அவ்வித்துவான் வசனித்த குறிப்பு யாதெனில்:-

"அல்லலுறு மஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான விசுவாச விளக்க
முன்னூற், புல்லிய சொற்
சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போர்ந்தவு ரோமாபுரியின் சங்கத்தேற,
தொல்லுலகிலுயர்ந்தகுரு குலத்துமன்னன் தொன்தியோ கெனுமுதலி
முயற்சியாலே, தெல்லிநகர்
வேளாளன் தொம்பிலிப்புச் செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னோ."

மேற்கூறிய உயர் குருகுலமன்னன் தொன்தியோகு முதலியா ரெவரெனப் பலருமறிந்த விஷயமே றோமாபுரி மந்திரி சபையோர்க் (Senators) கிலக்காய்ப் பறங்கிக்கார, டச்சுக்கார, ஆங்கிலேய அரசினர் மத்தியில் இலங்காநின்ற கௌரவ திசவீரசிங்கமுதலியார், புவிராசசிங்கமுதலியார், புவிமன்னசிங்கமுதலியார், அரசுநிலையிட்டமுதலியார், எதிர்மன்னசிங்கமுதலியார் மற்றும் பாரிய பிரபுக்களின் பூர்வ கோத்திரத்தைத் தொன்தியோகுமுதலியார் சார்ந்தவர். சிங்களவர், பறங்கிக்காரர் ராஜீரீக செங்கோல் செலுத்துங் காலங்களிற் கரையாளரென்னுங் கௌரவ காவற்படை வகுப்பினர் திருகோணமலையில் அணிவகுக்கப்பட்டிருந்தனர். பறங்கிக்காரருக் கெதிராய் டச்சுக்காரர் படையெடுத்தார்கள். பறங்கிகளினா லெதிர்த்து யுத்தம் பொருதமுடியாது, கோட்டையின் திறவுகோலைக் கரையாளுஞ் சேனைகளிடம் வாங்கித் திரிகோணமலையை யொப்புக் கொள்ளலாமென்று ஜெயசீல டச்சுக்காரரைக் கெஞ்சினர். கரையாளுங் கௌரவ சேனைக ளிருந்தபடி யிருக்கட்டும். அவர்கள் சுத்த வீரமரபினர். நீங்களூரைவிட்டகல் வேண்டியது. அல்லாவிடில், உங்களையுங் கோட்டை கொத்தளங்களையும் சட்டிப் பீரங்கிகளினால் சுட்டெரிப்போ மென்று டச்சுப் படைத் தலைவன் வற்புறுத்தவே, பறங்கிகள் காய்ச்சலும் பீச்சலுங் கொண்டு ஊரை விட்டுப் பறந்தனரென்றும் கௌரவ சைனியங்கள் முன்போலவே தங்கள் ராணுவ உத்தியோகத்தைப் பார்த்து வந்தார்களென்றும் 1639-ம் வருட டச்சுத் தளாதிபன் விடுத்த நிருபத்தில் வரையப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணக் குருகுலத்தவர்களைப் பற்றி ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் வசித்த அன்னிய முதியோர்க்குத் திண்ணமாய்த் தெரியும். எழுவாய் பயனிலை மற்றும் இலக்கிய இலக்கண நூல்களைச் செப்பறக் கல்லாது, ஐரோப்பியத் தொப்பியையுஞ் சல்லடத்தையும் மாட்டிச் செருமிப் பெருமை பாராட்டி ஞாயசாத்திரத்தைத் தப்பறக் கற்றோமென்றுறுமி வற்புறுத்தும் தம்பிகளுக் கிக்கருமம் கிறீக்குப் போலிருக்கும்.

இது நிற்கக் காலப்பிசகினாற் கௌரவர் யுத்தநிரையை விட்டுப் படிப்படியே விலகி யுத்தியோகம், வர்த்தகம், கமம் முதலிய தொழில்களில் முயன்றனர். சென்னபட்டணம், புதுச்சேரி, காரைக்காலென்னு மிந்திய நகரங்களில் இவர் முதலிப் பட்டத்துடனே கருத்தரித்துப் பிறந்து மரணமடைகின்றனர். நாகபட்டணப் பகுதிகளி லிவர் மரபினருக்குப் பட்டணச் செட்டிகளென்ற பட்டப் பெயர் பிறவியிலேயே சூட்டப்படா நிற்கின்றது.

மன்னராயிருந்தோர் வகை தப்பிப் போயின், சீவனத்திற்காக வேறுந் தொழில்களிலொழுகுவது வழமை. குருகுலத்தவரின் நிரை யவ்வாறிருப்பினும், சிறைத் தொழில் அடிமைத் தொண்டு வேலைகளி லிவர்கள் எக்காலத்திலு மமைந்ததாக யாம் கேள்விப்பட்டதில்லை. மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலுந் தான்மிக்க வெண்மை தருமென்றார் சான்றோரொருவர்.

பௌரவர் - பரதர்

பௌரவர் கௌரவரின் வமிசத்தவர். இவர் குரு அல்லது புருவென்னும் ராஜனின் சந்தானப்பதிகள். (Descendants of the Kuru or Puru dynasty). குருவென்பவர் அங்கிதீரன் புதல்வரி லொருவர். (The name of one of the nine sons of அங்கிதீரன் the first monarch of Jambu Dwipa) ஜம்பு துவிப்பாவென்னும் நாடு சிறிங்கமலைக்கப்பால் வட திசையிலிருக்கின்றது. இதைக் குருவரசன் பல்லாண்டுகளாய் ராச்சிய பரிபாலனஞ் செய்தவர். புருவென்பவர் சந்திரகுலத்தின் ஆறாவது சந்ததி மன்னன். (The name of a King the sixth of the lunar race) இது நிற்கப் பரதரென்னும் மொழியை வேளாள குலத்துதித்த V. விசுவநாதபிள்ளை யியற்றிய தமிழ் ஆங்கிலேய அகராதியிற் பார்வையிட்டால், துரியோதனன் குலத்தோர், நெய்த நிலமாக்கள் (Inhabitants of Maritime districts) என்ற அருத்தங்களங்கு விரிவாய் வரையப்பட்டிருக்கின்றன. கௌரவர்களைப் போலிவர்களும் நாடுநகரிழந்து, அன்னிய அரசரின் இராணுவங்களி லமைக்கப்பெற்று, நெய்த நிலமதாவது கடல் சார்பு நாடுகளின் காப்புச் சேனைகளாய் நியமிக்கப்பட்டனர். "மன்னராயிருந்த பேர்கள் வகைதப்பிப் போவாராகில் பின்னையு மாரோவென்று பேசுவாரேசுவாரே" அப்பிரகாரமே இதிகாசங்களைச் சற்றுங் கற்றறியா முழுமூடர் திங்கள்குலத்துங்க சீலராகிய பௌரவரின் நாமத்தைக் கசக்கி யொடுக்கி நசுக்கிப் பரவரெனும் வன்மொழி கூறித் தூற்றிப் பழிப்பது திங்களைப் பார்த்து நாய் தொங்கிக் குரைப்பதற்குச் சமானமென்றறிக.

வைசியர்

வைசியர் மூன்றாஞ் சாதி வகுப்பினர். பிர்மாவின் துடையினின்றிவர்க ளுதித்தவர்களாம். இவர்களுக்கு, இப்பர், எட்டியர், மன்னர், பின்னர், வணிகர், வாணிகரெனும் நாமதேயங்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இவர்களறு தொழிலோர். அதாவது:-

"மகந்தனைப் புரிதல்மிக்க மறைதனை யோதலீதல்
சகந்தனி லுளமருந்து சரக்கொடு மணிபொன்வெள்ளி
உகந்த வாணியங்கள் செய்தலுழவொடு பசுக்க்ச்ள் காத்தல்
அகந்தனில் வணிகர் தங் களறுதொழி லாகுமன்றே"

கோவைசியர், தனவைசியர், பூவைசிய ரென்றிவர்களுள் மூவகுப்பினருளர். கோமுட்டி, பொன்வாணியர், செக்குவாணியர் மற்றுஞ் செட்டுத்தொழில் புரிவோர் வைசிய குலத்தைச் சார்ந்தவர்களல்லர்.

சூத்திரர்

பிரம, சத்திரிய, வைசியரென்னும் முக்குலத்தோர்க் கேவல்புரிவோர் சூத்திரராம். வேளாளர் சூத்திர வகுப்பினரெனப் பலருஞ் சாதிக்கின்றனர். இந்தியாவிலும் அவ்வாறிவர்கள் வழங்கப்பட்டுப் பிள்ளையென்னும் வர்ணிப்பையுஞ் சிங்காரமா யணிந்திருக்கின்றன்ர். அவ்விதக் கொள்கை நமக்குப் பேதமாய்த் தோன்றுகின்றது. வேளாளர் பூவைசியரென்றே நம்மறிவிற் புலப்படுகின்றது. ஆனால் வீரமாமுனிவரின் சதுரகராதியைத் தடவிப் பார்த்தால், வேளாளர் சூத்திர ரென்றங்கு விசித்திரமாய்க் காணப்பட்டிருக்கின்றது. சூத்திரரெனும் மொழிக்க்வர் அருளும் ஏகார்த்த பதங்கள் யாதெனில்:- அயன்பதத்துதித்தோர், உழவர், களமர், காராளர், வேளாள ரென்பதேயாம். அன்றியும் வேளாளரைப் பற்றி உலகநாத பண்டிதர் அருளிச் செய்த குறிப்பைக் கேண்மின்:-

"உழவொடு பசுக்கள் காத்தலுற்ற வாணிபங்கள் செய்தல்
மொழிதரு மறையோராதி மூவர்க்கு மனுகூலஞ்செய்
தொழில்பல வியற்றநான் குஞ்சூத்திரர் தொழிலதாகும்
வழிமுறை தவறினன்னோர் வளங்கு சண்டாளராவர்."

சிவியார்

இந்தியாவைச் சேர்ந்த காரைநகர்க் கருகண்மையில் சிவிகையூரெனு மோர் கிராம மிருந்தது. இவ்வூரை நெறிநீதி தவறாமல் மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து அரசாண்டுவந்த அதிபதி சிவிகையரசனென் றழைக்கப்பட்டார். இவரின் மந்திரி தந்திரி மற்றுந் தலமைக்காரர் சிவியாரென்றழைக்கப்பட்டார்கள். ஏனென்றால் இவர்கள் பல்லக்கிலேறி இறைவன் கட்டளையை முறைமையோடு நடாத்தி வந்தவர்கள். சிவிகை நாட்டைப் பறங்கிக்காரர் பிடிக்கவே, அரசன் சிறையிலடைக்கப்பட்டு மாண்டனன். அவரின் மந்திரி தந்திரிகளாகிய சிவியார், தங்கள் குடிபதிகளுடன் யாழ்ப்பாணத் திடல்நாட்டிற் குடியேற்றஞ் செய்தனர். இவர்களின் குணாதிசயங்களை யாங் கண்டுணர்ந்தோம். "தலத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம், குலத்தளவேயாகுங் குணம்." இவர்கள் சிவிகை அல்லது பல்லக்குத் தூக்குஞ் சாதியென்று நகைப்போர், பேர்சிவல் பாதிரியார் (Revd Percival) அரங்கேற்றிய, இந்திய குடியேற்றப் பிரபந்தத்தைச் சற்றுக் கற்றுணர்வார்களாக.

கம்மாளர்

கம்மாளரென்பவர், கருமகாரர், சிற்பகாரர், சித்திர விற்பன்ன நாகரீக வித்தைபுரிபவரேயாம். இவ்வித புனிதவேலை புரிபவர், தட்டார், கொல்லர், கன்னார், தச்சரென் றழைக்கப்படா நிற்கின்றனர். சென்னை மாநகரின் கண்ணே, ஆங்கிலேய தமிழ்ப் பாஷைகளைப் பழுதறக் கற்றுணர்ந்து, தமிழ் ஆங்கிலேய அகராதியை யரங்கேற்றிப் பிரவல்ய கீர்த்திப் பிரதாபம் படைத்த C. விசுவநாதபிள்ளையவர்கள் கம்மாளரை விசுவப்பிராமண ரென்றும், விசுவகரும ரென்றும் தமது நூலிற் சாற்றியிருக்கின்றனர். ஆங்கிலேயத்தில் அவர் வரைந்திருப்பது யாதெனில்:- கம்மாளன் is the son of Brahma and architect of the Gods. கம்மாளன் பிரமாவின் புத்திரனும், தேவர்களின் சிற்பாசாரியு மென்பதேயாம். நான்முகக் கடவுளின் வதனத்தினின்று பிராமண நுற்பத்தியானவன். நான்முகக் கடவுளென்பவர் பிரமா. கம்மாளன் பிரமாவின் புத்திரன். ஆனதுபற்றிப் பிராமணனுக்கும் கம்மாளனுக்குமுள்ள வித்தியாசமென்ன?

நழவர்

நழவரெனும் நாமம் பெருந்தப்பறை. இவர்கள் நழுவிகளென்று காலஞ்சென்ற பிரவல்ய அத்துவக்காத்து பிறிற்றோத்துரையவர்கள் (Britto) தாமியற்றிய, யாழ்ப்பாண வைபோக மாலையில் தெளிவாய்க் காண்பித்திருக்கின்றனர். இவர்கள் தமிழ் இராணுவத்திற் சிப்பாய் வேலை (Sepoys) நடாத்தினவர்கள். உத்தியோகத்திற் கதித்தோர் தங்கள் தத்துவத்தை மிதமிஞ்சிக் காட்டினபடியால், இவர்கள் இராணுவத்தை விட்டு நழுவிச் சான்றோரெனுஞ் சாதியை நம்பி யவர்கள் மத்தியில் வாசஞ் செய்தனர். சான்றோர் மரமேறுஞ்சாதி. உலகநாத பண்டிதர் சான்றோரைப் பற்றிச் சாற்றுவதைக் கேண்மின்:-

"அதுலமாமரர் சாதி யரிவையைப் பெருவெள்ளாளன்
புதுமணம் புணரவந்த புத்திரர் சான்றோராகி
முதுபனையிஞ் சிற்றூக்கு முட்டியில் முட்டியூறு
மதுவினைக் காய்ச்சி விற்றுவரும் பொருள்விரும்பி வாழ்வார்"

இப்பாவின் தாற்பரியம் யாதெனில்:- ராஜகுலத் துதித்த புத்திரியைப் பெரும்வேளாளன் மன்றல் செய்து பெருகின சந்தானத்தார் சான்றோரென் றழைக்கப்பட்டன்ர். ராஜகுலத்திலிவர்கள் கலந்ததாலே, நாடாரென்னும் நாமதேயத்தையு மிவர்கள் சூட்டப் பெற்றனர். யுத்தராணுவத்தை விட்டுவிலகின நழுவிகள், யுத்தவீரவகுப்பினரென்பதற்கு யாதோர் ஆட்சேபனையுங் கிடையாது. சான்றோரை நம்பி அவர்களுடன் சம்மந்தஞ் செய்தபடியால் நழுவிகளுக்கு நம்பிகளென்ற பெயரும் வழங்கி வருகின்றது. மரமேறுந் தொழில் நம்பிகளின் சாதித்தொழிலல்ல. இது நிற்க. மரமேறுந் தொழில் ஈனத்தொழிலோவென்று சற்று வியாக்கியானஞ் செய்வோமாக. யுத்தக்கப்பல்களை நடாத்துவோர் யார்? பாய்மரத்தில் சற்றுப் பழுது நேரிட்டால் அதிலேறி யப்பழுதைச் சீராக்குவது யார்? யுத்த ராணுவ உத்தியோகத்தரே! பிரசண்ட மாருதப் புயலென்றும், கடும்மாரியென்றும், அந்தகாரமென்றும், வெய்யிலென்றுஞ் சிந்தியாமல் அஞ்சா நெஞ்சுடன் பாய்மரத்திலேறி யிறங்குந்தொழில் வீரசூரத்தனமாயிருக்கில், தென்னை பனை முதலிய விருட்சங்களிலேறிப் பிழைக்குந் தொழில் எழிய வேலையா யிருப்ப தெங்கனம்?

பள்ளர்

தமிழ்ப்பாஷையி லுற்பத்தியான அகராதிகளுள் வீரமாமுனிவரியற்றிய சதுரகராதியே நிகண்டுடன் ஐக்கியப்பட்டுத் தமிழ்ப் பாஷையைத் தப்பறையின்றி யிப் புவிமாந்தர்க்குச் செப்புதற்கரிய அற்புதமொழிகளைச் செம்மையாய்க் காண்பிக்கின்றது. இவ் வகராதியில் பள்ளரெனும் மொழியை யுள்ளம்மகிழ வுற்றுப் பார்த்தோம். பள்ளரென்பது உழவரென அங்கு வரையப்பட்டிருக்கின்றது. உழவரென்பது உழுதுண்டு வாழ்பவர். இவர்கள் ஏராளரென்றும் அழைக்கப்படுகின்றார்கள். ஏரென்பது கலப்பை, உழுபடை. உழுகிறவனை, மள்ளன் அல்லது பள்ளன், மேழியனென்று பேர்சிவல் (Revd Percival) பாதிரியின் அகராதியில் காணப்பட்டிருக்கின்றது. இது நிற்கக் காராளரென்பவர் வேளாளர். பூர்வீக இந்திய சரித்திரங்களைப் பரிசோதித்துப் பார்த்தால். ஏராளருங் காராளருங் கிட்டின மரபினரெனச் சொல்லத்தகும். இந்தியாவைச் சேர்ந்த காரைநகர்ச் சமீபத்திலுள்ள மேட்டில் காராளர் வசித்தார்கள். அதைச்சார்ந்த பள்ள நிலத்தில் ஏராளர் குடிபதியாயிருந்தார்கள். ஏழு வருடங்களாய் இடைவிடாது மாரிபொழியவே, மேட்டு நிலத்தில் பயிர்செய்த காராளருக்குக் குருச்சந்திரயோக மடித்தது. பள்ள நிலத்தில் வேளாண்மை செய்த ஏராளரின் பயிர் நாசமாயிற்று. சனிபகவானின் தயவை முன்னிட்டு காராளர் ஏராளரை (பள்ளரை)ப் புறக்கணித்து, கீழ்நிரையிற் தள்ளிவிட்டனர். அவ்வாறிருப்பினும் உண்மைக் கழிவில்லை. அண்ணன் பெருங்குலமாகில் தம்பி இழிகுலமாவதெங்கனம்?

அம்பட்டன்

தமிழ் நூல்களையும் அகராதிகளையும் ஆராய்ச்சி செய்யுங்கால் அம்பட்டர், சிற்பத்தொழிலோர் மாதுக்குஞ் செக்கானுக்கும் பிறந்த சந்ததி மரபினர். (The son of an oil presser and a woman of the mechanic caste) இவ்வருண த்தவர்கட்குப் பரிகாரி, பண்டிதன், மஞ்சிகன், மாசுதீர்ப்போனெனும் நாமதேயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரிகாரி, பண்டிதன், மாசுதீர்ப்போனெனும் மொழிகளை யாமிங்கு விபரிக்க வேண்டியதில்லை. சிறுகப் படித்த பெரியோர் சிறியோர் அறிவிலிஃது இலகுவிற் புலப்படும். உலகநாத பண்டிதரியற்றிய சாதிபேத விளக்கத்திற் பின்வரும் விளக்க மிலங்குகின்றது:-

"அந்தணர் வசியர் மாதை யருமறை விதியிற்புல்க
வந்தவன் பண்டிதஞ் செய் மறையவனாகி மிக்க
தந்திர மருந்தினோடு சாஸ்திரத் தொழிலும் பூண்டு
முந்திய மறையோர்க்கென்று முறையினிற் பிணிகடீப்பார்"

பிணிதீர்ப்போர்க்குப் பற்பல தொழில்களுண்டு. மயிர் முளைக்குந் தானங்களில் அடி காயம் புண்ணேரிட்டால் வைத்தியர் புரியுங் கருமம் யாது? காயச்தானங்களிலுள்ள மயிரை வினையஞ்செய்து அங்கண் தைலம், சாந்து, பூச்சு உபநாகம் பிரயோகிப்பர். ஆனதுபற்றியே அம்பட்டரை மயிர்வினையரென்றும், மாசு தீர்ப்போ ரென்றும் தமிழ்நூல்கள் கூறுகின்றன. வெட்டுக் காயங்கள்மேல் படர்ந்திருக்கும் மயிர்களைச் சிரைத்து, வைத்தியம் செய்யும் டாக்டர் சிரோண்மணிகள் உயர்நிலையிலுள்ளவர்களாகில், அம்மாதிரி வேலைகளைச் செப்பனாய்ச் செய்யும் அம்பட்டர் கீழ்நிரையோராய் மதிக்கப்படுவது நீதியோவென்றோர் போதகர் வினாவுகின்றனர்.

பறையன்

பறையனெனுஞ் சொல் பறையறைவோன், வள்ளுவன், வருங்காரியஞ் சொல்வான், புரோகித னெனும் அர்த்தத்தைத் தருகின்றது. பறையறைதலென்பது அரசர் மகோற்சபங்களில் சமூகமளித்தல், அரசர் வருகையைப் பகிரங்கப்படுத்தல், அரசர் பரிவாரங்களுமுன்னேறுதல், அரசர் சட்டதிட்டங்களைப் பட்டாங்கிலுள்ளோர்க்குத் தட்டி வெளிப்படுத்துதலென்பதேயாம். வள்ளுதலென்பது வருங்காரியங்களை முன்னெடுத்தோதுதல், புரோகிதனென்பது இந்திரனென்ற அருத்தத்தையுங் குலகுருவென்ற கருத்தையுந் தருகின்றது. "மறையவன் மங்கைதன்னை வள்ளுவன் மணந்திட்டானே" யென்றோர் பண்டிதர் விள்ளுகின்றனர். திருவள்ளுவரும், ஔவையும் இம்மணத்தாலுதித்த வித்துவ சிரோண்மணிகள். "பார்ப்பார் குலத்தில் மேற்குலம் பறைக்குலம், கேட்பாரில்லாமல் கீழ்க்குலமாயிற்றந்தோ" வென்ற சுலோகமின்னுமுலகில் வழங்குகின்றது. பார்ப்பானையும் பறையனையுஞ் சீர்தூக்கிப் பார்க்குங்கால், இருதிறத்தவர்களும் ஒரு மரபினரென்று சொல்லத்தகும். இவர்கள் மாமன் மருமகன் நிரையிலிருக்கின்றனர். ஆனால் மாமன் கல்விச் செல்வத்தில் சிறந்து வளர்ந்தோங்கின படியால், வறுமைப் பெரும்பிணியால் பீடிக்கப்பட்ட மருமகனைத் தள்ளிவைத்தனன். இந்த விபரீத மெக்குலத்திலும் எக்குடும்பத்திலும் நடைபெற்றுவருகின்றது. இப்பிணியை மாற்ற வாகடத்தில் மருந்து கிடையாது. தரித்திரமென்னுமோர் மருந்தில் தீருமாம்.


புத்தகத்தை வெளியிட்டொர்

Published by
James John
Swartz Lane
CHUNDIKULI
JAFFNA
1967

இஃது
சிங்கை ஜனனதூதன் பத்திராதிபர்
இ. ம. தைரியர்
Alias
குருகுலசேகர தைரிய முதலியாரவர்களினால்இயற்றப்பட்டது.
(R. M. Thyriar.)

அச்சுப் பதிவு:
சிறீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்

இன்று "ஜாதி" என்ற விடயம் எம்மத்தியில் பாரதூரமான அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தாவிடினும் அது பற்றிய அறியாமை கலையப்படவேண்டும்.

இவ்வளவும் அறிந்திருந்தும் நாம் ஜாதியைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோமென்றால் அதற்கு காரணம் நமது மணம் தான். என்னதான் நாம் ஜாதியை இல்லாமல் ஒழிப்போம் என்று முழங்கினாலும் நமது ஆழ் மணதில் காணப்படும் "நான் உயர்ந்த ஜாதி மற்றவர் தாழ்ந்த ஜாதி"
என்ற எண்ணம் தான் எம்மை இன்னும் ஜாதியைப் பற்றி பேச வைக்கின்றது. மேற்கண்ட நூலின்படி ஜாதி என்ற பிறிவு அவரவர் செய்த தொழிலின் அடிப்படையிலேயே உருவானது. அப்படி இருக்க நாம் ஏன் ஜாதியைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்? ஒளவையார் மனித ஜாதி இரண்டு. அதில் ஒன்று ஆண் ஜாதி மற்றொண்று பெண் ஜாதி என்கின்றார். சரி நாம் ஜாதி உண்டென்றே வைத்துக்கொள்வோம் நம்மில் யாராவது முடி திருத்துபவன் தாழ்ந்த ஜாதி என்று முடி வெட்டாமல் இருந்திருக்கிறோமா? இல்லையே ஆகவே ஜாதி என்பது தேவையற்ற ஒரு விடயம் இதை மனிதர்கள் நாம் பயன்படுத்தி எதை சாதிக்கப்போகிறோம் ? மனிதனாக பிறந்த நாம் மனிதனாகவே வாழ்வோம் அதைவிட்டு ஏன் இடையில் ஜாதி அது இது என்று மிருகமாகின்றோம்?

இந்த கருத்தை நூலாசிரியரின் வாயிலாக தெரிவிக்கவே அவரின் நூலை அதே வடிவில் பிரசுரித்துள்ளேன்.

இது போன்ற நூல்கலை மின்னூல் வடிவில் பலருக்கும் உதவும் வண்ணம் அளப்பெரிய சேவை ஆற்றும் "நூலகம் திட்டத்திற்கு" (noolaham.net) எனது மணமார்ந்த நன்றிகள்.